வெள்ள அனர்த்தம்! - 200 இற்கும் மேற்பட்ட நகரங்களில் பாடசாலைகள் மூடப்படுகின்றன!!
9 கார்த்திகை 2023 வியாழன் 14:26 | பார்வைகள் : 10749
வெள்ள அனர்த்தம் காரணமாக பா-து-கலே மாவட்டத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட நகராட்சிகளில் பாடசாலைகள் மூடப்படுகின்றன.
சற்று முன்னர் உள்துறை அமைச்சர் இத்தகவலை அறிவித்தார். பா-து-கலே (Pas-de-Calais) மாவட்டத்துக்கு வெள்ளம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. அதையடுத்து இன்று நண்பகலில் இருந்து திங்கட்கிழமை காலை வரை அங்குள்ள 200 நகராட்சைகளைச் சேர்ந்த பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள் போன்ற கல்வி நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வெள்ளப்பெருக்கு காரணமாக தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan