இலங்கையில் முச்சக்கரவண்டி மீது மோதிய பேருந்து - 13 பேர் காயம்
8 கார்த்திகை 2023 புதன் 05:15 | பார்வைகள் : 8160
மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்க சொந்தமான பேருந்தொன்று நாகொட - கலஸ்ஸ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 13 பேர் காயமடைந்து களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோவிலுக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாuின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணித்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan