மீட்புப்பணிக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீது தாக்குதல்!
 
                    6 கார்த்திகை 2023 திங்கள் 16:51 | பார்வைகள் : 9350
மீட்பு பணிக்கு வருகை தந்த தீயணைப்பு படை வீரர்கள் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
Haut-Rhin நகரில் இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் அங்குள்ள தீயணைப்பு அலுவலகத்தை தொடர்புகொண்டு, தனது நண்பர் சுகவீனமுற்றுள்ளதாக தெரிவித்து, தீயணைப்பு வீரர்களை அழைத்துள்ளார். சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர்.
அங்கு, 21 வயதுடைய இளைஞன் ஒருவன், அரை மயக்கத்தில் கிடந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் முனைப்பில் தீயணைப்பு படையினர் இருக்க, இரண்டாம் நபர் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இரு தீயணைப்பு வீரர்களுக்கும் முகத்தில் குத்தியுள்ளார். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத அவர்கள், பின்னர் சுகாதரித்து தாக்குதல் நடத்திய நபரை சமாளித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan