ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்!

3 கார்த்திகை 2023 வெள்ளி 14:23 | பார்வைகள் : 5747
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர் வெல்லவாய புதுருவகல பாடசாலை மைதானத்தில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வெலிமடைக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் வேறு ஒரு வாகனம் வரும் வரை காத்திருந்து ஜனாதிபதி பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார்
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025