Paristamil Navigation Paristamil advert login

கட்டார், எகிப்த் அரச தலைவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி மக்ரோன்!!

கட்டார், எகிப்த் அரச தலைவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி மக்ரோன்!!

19 கார்த்திகை 2023 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 13228


கட்டார் மற்றும் எகிப்த் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று சனிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினார்.

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கிடையே கட்டார் முக்கிய மத்திஸ்தனம் வகிக்கும் நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் பிணயக்கைகளிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு மக்களை விடுவிப்பது தொடர்பில் மக்ரோன் அவர்களோடு உரையாடியதாக எலிசே மாளிகை தெரிவிக்கிறது.

எட்டு பிரெஞ்சு மக்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதே பிரான்சின் முதல் முழுமுதல் நோக்கமாகும் எனவும் மக்ரோன் அவர்களிடம் வலியுறுத்தினார்.