Paristamil Navigation Paristamil advert login

PSG கழக வீரரின் உடமைகளை கொள்ளையிட்ட இளைஞன் கைது!!

PSG கழக வீரரின் உடமைகளை கொள்ளையிட்ட இளைஞன் கைது!!

15 கார்த்திகை 2023 புதன் 15:40 | பார்வைகள் : 9662


PSG கழத்தின் பந்துக்காப்பாளரது உடமைகளை கொள்ளையிட்ட 17 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Poissy (Yvelines) நகரில் இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான எதோ ஒரு நாளில் இடம்பெற்றுள்ளது. பந்துக்காப்பாளர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அறையினை உடைத்த கொள்ளையன் ஒருவர், அவரது மடிக்கணனி, தொலைபேசி, 4G Router போன்ற பொருட்களை திருடிக்கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், தடயங்களைச் சேகரித்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர். பின்னர் அவர், இந்த வாரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்