அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்! 3 தாதிமார் பலி

13 கார்த்திகை 2023 திங்கள் 08:13 | பார்வைகள் : 9330
காசாவில் உள்ள அல்ஸிபா மருத்துவமனையில் மூன்று மருத்துவதாதிமார் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு அருகில் விமானக்குண்டுவீச்சும் மோதல்களும் தீவிரமடைந்துள்ளது.
மருத்துவமனையின் ஒக்சிசன் உற்பத்தி நிலையம் இருதயசத்திரசிகிச்சை பிரிவு தண்ணீர் தொட்டிகள் உட்பட முக்கியமான கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுவதை மருத்துவமனையின் சத்திரகிசிச்சை பிரிவின் தலைவர் வைத்தியர் மர்வன் அபு சடா பெரும் பொய் என நிராகரித்துள்ளார்.
நாங்கள் பொதுமக்கள் நான் மருத்துவர் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் நோயாளிகள் உள்ளனர் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர் வேறு எவரும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025