"எங்கள் சம்பளம் பணவீக்கத்திற்கு ஏற்ப இல்லை": புலம்பும் ஊழியர்கள்!

10 வைகாசி 2025 சனி 14:48 | பார்வைகள் : 4949
நகரங்களில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள், குறிப்பாக ஆசிரியர்கள், தாதிகள் மற்றும் காவல்துறையினர், வீட்டு வாடகை உயர்வால் தங்கள் பணியிடத்திற்கு அருகில் வீடு கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
"எங்கள் சம்பளம் பணவீக்கத்துடன் ஒத்து போகவில்லை" என்ற குறைபாடும், வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையும் இவர்களுக்கு உள்ளன.
இதற்கு தீர்வாக, மக்ரோனின் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமியல் (David Amiel), இத்தகைய ஊழியர்களுக்காக அவர்கள் பணியில் இருக்கும் வரை பயன்படுத்தக்கூடிய "பணியிட வீடுகள்" வழங்கும் சட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதற்கு வீடமைப்பு அமைச்சரின் ஆதரவும் பெற்றுள்ளது.
பரிசில் ஒரு மருத்துவ மேலாளர் மாதம் 800 யூரோக்கு 50 சதுர மீட்டர் வீட்டில் வசிப்பது போன்ற உதாரணங்கள் இந்த முயற்சி எவ்வளவு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.
இந்த திட்டம், குறைந்த செலவில் அரசு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கவும், அரசு பணிகளுக்கு மக்களை ஈர்க்கும் நோக்கமாகவும் அமைந்துள்ளது. பணியிட வீடுகள் அரசு மற்றும் சமூக வீட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பில் உருவாக்கப்படும், எனவே இது நிலையான வீட்டு வசதி வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.