இலங்கை வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு

26 சித்திரை 2025 சனி 08:52 | பார்வைகள் : 3107
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
GSP+ சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு வருகிறது.
இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.