பனிச்சரிவில் சிக்கியவர் பரிதாபச் சாவு!!

18 சித்திரை 2025 வெள்ளி 12:22 | பார்வைகள் : 3786
அதே Savoieபகுதியில் பாரிய பனிவீழ்ச்சியைத் தொடர்ந்து அங்குள்ள Thorens (Savoie) பகுதியில் நடந்த பனிச்சரிவில், சிக்கிய நபர் ஒருவர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருந்தார்.
மீடகப்படும் பொழுதே, அவரிற்கு இருதயம் மற்றும் சுவாச நிறுத்தங்கள் ஏற்பட்டிருந்தாலும், உலங்கு வானூர்தியில் உடனடியான கிரெனோபிள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
சிகிச்சைகள் பலனின்றி பிரித்தானியாவைச் சேர்ந்த இநத 27 வயதுடையவர் சாவடைந்துள்ளார். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிக்கு பனிச்சரிவு செம்மஞ்ஞள் எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.