பரிஸ் : Hypercacher கடைக்கு அருகே தீ வைப்பு!!

20 பங்குனி 2025 வியாழன் 17:05 | பார்வைகள் : 3750
Hypercacher நிறுவனத்தின் கடையின் அருகே தீவைத்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மார்ச் 19, நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் Porte de Vincennes பகுதியில் உள்ள அங்காடியான Hypercacher அருகே இருந்த குப்பைத் தொட்டிகளை ஒருவர் தீ வைத்து எரித்துள்ளார்.
இரவு 2 மணி அளவில் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். தீ அணைக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியானது 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது பயங்கரவாதி Amédy Coulibaly, குறித்த கடைக்குள் பதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.