இலங்கையில் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம்

8 மாசி 2025 சனி 16:46 | பார்வைகள் : 3255
இலங்கையில் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
உப்பு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்