Aubervilliers : பாரிய தீ விபத்தில் சிக்கிய சேமிப்பகம்!

18 தை 2025 சனி 15:07 | பார்வைகள் : 2940
Aubervilliers (Seine Saint-Denis) நகரில் உள்ள சேமிப்பகம் ஒன்று பாரிய தீ விபத்தில் சிக்கியது. 136 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயணை அணைத்தனர்.
Rue du Tournant வீதியில் உள்ள 1,100 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய சேமிப்பகம் ஒன்று இன்று ஜனவரி 18, சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தீவிபத்துக்குள்ளானது. உடனடியாக அங்கு தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு, தீ கட்டுப்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டுமணிநேரங்களுக்கு மேலாக போராடி நண்பகல் வேளையிலேயே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
136 தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர். ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.
