பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து : இரு மாணவிகள் உயிரிழப்பு
1 கார்த்திகை 2024 வெள்ளி 11:09 | பார்வைகள் : 4098
பதுளை - துன்ஹிந்த 4 ஆவது மைல்கல் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தில் 40 பேர் பயணித்துள்ளனர்.
விபத்து சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan