Paristamil Navigation Paristamil advert login

சீனா மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்  பலி

 சீனா மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்  பலி

8 வைகாசி 2024 புதன் 12:35 | பார்வைகள் : 882


தென்மேற்கு சீனாவில் உள்ள மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறபடுகின்றது.

யுனான் மாகாணத்தில் உள்ள Zhenxiong மக்கள் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 23 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படும் அதேவேளை , பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்