Paristamil Navigation Paristamil advert login

தைவான் கடலில் மீண்டும் நிலநடுக்கம்: 20 கி.மீ ஆழத்தில் தாக்கிய அதிர்வு!

தைவான் கடலில் மீண்டும் நிலநடுக்கம்: 20 கி.மீ ஆழத்தில் தாக்கிய அதிர்வு!

7 வைகாசி 2024 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 697


தைவான் கிழக்கு கடற்கரையில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தைவானின் கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் கடல் பகுதியில் 06.05.2024 மாலை 5.45 மணிக்கு ரிக்டர் அளவில் 5.3 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் தோன்றியதாகவும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவானில் அண்மைக் காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2024 ஏப்ரல் 2ஆம்  திகதி  ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

தற்போதைய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்