Paristamil Navigation Paristamil advert login

■ பொபினியில் கிரைனைட் குண்டு வீச்சு! - துப்பாக்கிச்சூடு!

■ பொபினியில் கிரைனைட் குண்டு வீச்சு! - துப்பாக்கிச்சூடு!

6 வைகாசி 2024 திங்கள் 19:12 | பார்வைகள் : 3777


பொபினியில் (Bobigny -Seine-Saint-Denis) நேற்று ஞாயிற்றுக்கிழமை கிரைனைட் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

கறுப்பு நிற ஆடை அணிந்த ஒருவர், இரவு 10 மணி அளவில், Rue du Chemin-Vert வீதியில் வைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அத்தோடு கிரைனைட் குண்டு ஒன்றும் பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.  இந்த முழக்கம் அப்பகுதி முழுவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பலர் அவசர இலக்கமான 17 இனை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்தடைந்த போது, ஆயுததாரி அங்கிருந்து தப்பி ஓடி மறைந்துள்ளார்.

அங்கிருந்து இருபது துப்பாக்கிச் சன்னங்களின் கோதுகளை காவல்துறையினர் மீட்டனர். கிரைனைட் குண்டின் மீதியும், ரைஃபிள், கலிபர் வகை துப்பாக்கிகளின் சன்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணைகளை வேகமாக ஆரம்பித்த காவல்துறையினர், அருகில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தொடர்புகொண்டு விபரங்களை சேகரித்தனர். மருத்துவமனைகளில் புதிதாக யாரையும் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இரவு 11.30 மணி அளவில் Peugeot 308 மகிழுந்து rue Henri-Gautier வீதியில் வைத்து எரிக்கப்பட்ட நிலையிலும், பத்து நிமிடங்கள் கழித்து வெள்ளை நிற வேன் வாகனம் ஒன்று Drancy நகரின் rue Jean- Baptiste- Clément வீதியில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்