Paristamil Navigation Paristamil advert login

துபாயில் உருவாகிறது உலகிலேயே மிக பெரிய புதிய விமான நிலையம்

துபாயில் உருவாகிறது உலகிலேயே மிக பெரிய புதிய விமான நிலையம்

29 சித்திரை 2024 திங்கள் 00:46 | பார்வைகள் : 485


துபாயில் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அமைய உள்ளது.

இது குறித்து துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்து இருப்பதாவது: 

தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட புதிதாக உலகின் மிக பெரிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இது கட்டப்பட உள்ளது. புதிய விமான நிலையம் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியதாக இருக்கும்.

இந்த விமான நிலையத்தில் 400 வாயில்கள் மற்றும் 5 ஓடுபாதைகளும் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 260 மில்லியன் பயணிகளுடன் உலகின் மிகப்பெரிய திறன் கொண்டதாக இருக்கும். துபாய் விமான போக்குவரத்து துறை முதன் முறையாக இந்த விமான நிலையத்தில் புதிய விமான தொழில்நுட்பங்களை காண உள்ளது.

மேலும் விமான நிலையத்தை சுற்றி ஒரு முழு நகரம் கட்டப்படும் எனவும்,புதிய விமான நிலையம் அல்மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் என என தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்