Paristamil Navigation Paristamil advert login

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வாள் வெட்டு - மூவர் வைத்தியசாலையில்

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வாள் வெட்டு - மூவர் வைத்தியசாலையில்

22 வைகாசி 2024 புதன் 17:19 | பார்வைகள் : 1438


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையிலான மோதலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்