Paristamil Navigation Paristamil advert login

கிழக்குபல்கலைகழக மாணவர்களின் நினைவகத்தை அழித்த பொலிஸார் - வலுக்கும் கண்டனம்

கிழக்குபல்கலைகழக மாணவர்களின் நினைவகத்தை அழித்த பொலிஸார் - வலுக்கும் கண்டனம்

18 வைகாசி 2024 சனி 14:19 | பார்வைகள் : 1507


கிழக்கு பல்கலைகழக மாணவர்கள்  உருவாக்கியிருந்த தற்காலிக நினைவகத்தை பொலிஸார் அழித்தமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகத்தர் வெளிப்படுத்திய வன்முறை அவமரியாதை தற்காலிக நினைவகத்தை தண்டனை குறித்த அச்சமின்றி அவர் அழிப்பது போன்றவை கவனத்தை ஈர்த்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும்  பொலிஸ்மா அதிபரும் சட்டம் மற்றும் அரசியல்அமைப்பை மீறுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்