Paristamil Navigation Paristamil advert login

மோனலிசா ஓவியத்தை இனி பார்வையிட முடியாது -  அருங்காட்சியக நிர்வாகம் அறிவிப்பு

மோனலிசா ஓவியத்தை இனி பார்வையிட முடியாது -  அருங்காட்சியக நிர்வாகம் அறிவிப்பு

24 சித்திரை 2024 புதன் 05:38 | பார்வைகள் : 486


மோனாலிசா ஓவியம் உலகின் மிகவும் பெருமை வாய்ந்த ஓவியங்களில் ஒன்றாகும். 

இது உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட ஓவியமாக காணப்படுகிறது பார்வை அனுபவத்தை மேம்படுத்த லூவ்ரே அருங்காட்சியகத்தின் முயற்சியில் ஒரு நிலத்தடி அறைக்கு மாற்றப்படலாம் என குறித்த அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது .

இந்த உருவப்படம் தற்போது சாலே டெஸ் எட்டாட்ஸின் மையத்தில் புல்லட்-proof கண்ணாடிக்கு பின்னால் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதன் உறைக்குள் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஓவியம் சிதைவடையாமல் இருப்பதை உறுதிசெய்ய இறுக்கமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆனால் ஒரு சமீபத்திய கணக்கெடுப்பில் சுற்றுலாப் பயணிகள் அந்த ஓவியத்தின் அனுபவத்தை அனுபவிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது,

இதன்காரணமாக குறித்த ஓவியத்தை நிலத்தடியில் ஓர் இருட்டு அறைக்குள் சிலகாலம் வைத்திருக்க அருங்காட்சியக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைக்கபெற்றுள்ளன பார்வையாளர்களின் பார்வை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டில் பாதுகாப்பு உறை எதிர்ப்பு பிரதிபலிப்பு தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டது எனபதும் குறிப்பிடத்தக்கது.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்