Paristamil Navigation Paristamil advert login

தம்பதிகள் சண்டை போடுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

தம்பதிகள் சண்டை போடுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

23 சித்திரை 2024 செவ்வாய் 14:56 | பார்வைகள் : 790


உங்கள் முழு வாழ்க்கையையும் ஒருவருடன் செலவிடுவது எளிதான காரியம் அல்ல, ஆனால் சிலர் இந்த கடினமான பணியை அழகாக எளிதாக்குவதுடன், சிறந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். உங்களைப் போலவே சிந்திக்கும் ஒருவரை மட்டுமே நீங்கள் நேசிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தங்கள் சொந்த உலகில் வாழ்பவரை, யதார்த்தத்தை விட கற்பனையில் வாழ விரும்புபவரை அல்லது அதிக உணர்ச்சிவசப்படுபவரையும் நீங்கள் விரும்பலாம்.

அப்படிப்பட்டவர்கள் ஜோடியாகிவிடுகிறார்கள், ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் ஒன்றாக வாழ்வது கடினம். இதுபோன்ற சூழ்நிலையில் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், உங்களுக்கிடையேயான புரிதல் மேம்படும்., சிறந்த துணையாக மாறுவீர்கள். தம்பதிகள் சண்டை போடுவதற்கு பொதுவான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

திருமண உறவில் இருக்கும் முதல் சவலே. எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமில்லாமல் இருப்பது தான். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி உங்கள் இருவருக்கும் வெவ்வேறு யோசனைகள் இருந்தால், உங்கள் பாதைகள் வேறுபட்டதாகத் தோன்றினால், அது உங்கள் உறவுக்கு ஒரு பிரச்சனையாக மாறும், மேலும் நீங்கள் இருவரும் தொடர்ந்து பயத்தில் வாழலாம். எனவே இதுகுறித்து இருவரும் பொறுமையாக அமர்ந்து பேசிக்கொள்வது நல்லது.

நீங்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசாதபோது இரண்டாவது பிரச்சனை எழுகிறது. உங்கள் துணையுடன் ஒரு தீவிரமான பிரச்சினையைப் பற்றி விவாதிக்கும் போது நீங்கள் பயனற்ற ஒன்றைச் சொன்னால், அது உங்கள் உறவில் சிக்கலாக மாறும். உங்கள் துணையின் கருத்துகளை புரிந்து கொண்டு, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் தெளிவாக பேசும் போது தீர்வு கிடைக்கும்.

திருமண உறவில் பிரச்சனை ஏற்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் துணை மீது நம்பிக்கை இல்லாதது. நம்பிக்கையே எந்த உறவுக்கும் அடிப்படை. நீங்கள் ஒருவரையொருவர் நம்புவதற்குப் பதிலாக மூன்றாவது நபர் சொல்வதை நீங்கள் நம்பினால், உங்கள் உறவு பிரச்சனைகளும், விரிசலும் ஏற்படும். இது உறவுக்கே ஆபத்தாக மாறும்.

நான்காவது பிரச்சனை மிகவும் பொதுவானது. காதல் என்ற பெயரில், உங்கள் துணையின் தனிப்பட்ட இடத்தில் நீங்கள் தலையிட்டால் அல்லது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களைச் சந்திப்பதைத் தடுத்தால், அது உங்கள் உறவையும் பாதிக்கலாம். எனவே உங்கள் துணைக்கான தனிப்பட்ட இடத்தை வழங்குவது முக்கியம்.

குடும்பமும் சமூகமும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் அழுத்தம் கொடுத்தால் அது உங்களுக்கிடையே பயத்தை அதிகரிக்கும். இது உங்கள் இருவருக்கும் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பயத்தின் நிழலில் வாழத் தொடங்குவீர்கள். உங்கள் உறவு வாழ்நாள் முழுவதும் நீடிக்க விரும்பினால், இதுபோன்ற சவால்களில் இருந்து விலகி, சிறந்த துணையாக மாற முயற்சி செய்யுங்கள்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்