Paristamil Navigation Paristamil advert login

மகளிர் தினம் ஏன் மார்ச் 8-ல் கொண்டாடப்படுகிறது..?

 மகளிர் தினம் ஏன் மார்ச் 8-ல் கொண்டாடப்படுகிறது..?

5 பங்குனி 2024 செவ்வாய் 07:17 | பார்வைகள் : 1014


பெண் என்பவள் அனைத்து உறவுகளையும் ஒன்றாக வைத்துக்கொள்கிறாள் என்றும், எந்தத் துறையிலும் ஆண்களை விட பெண்களின் பங்களிப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. வீட்டைக் கவனித்துக்கொள்வதோடு, அலுவலகப் பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்கிறாள். அதுமட்டுமின்றி, நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பெண்களின் பணிக்கு சிறப்புப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் மார்ச் 8ஆம் தேதி அன்று மட்டும் ஏன் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதன் பின்னணி என்னவாக இருக்க முடியும்? இதன் வரலாறு என்னவாக இருக்க முடியும்? இது தொடர்பான சில காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..

இந்த நாளுக்குப் பின்னால் உள்ள வரலாறு சுமார் 108 ஆண்டுகள் பழமையானது. 1909 ஆம் ஆண்டில்,  நியூயார்க்கில் குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம் மற்றும் வாக்குரிமை இல்லாமை ஆகியவற்றை தங்களுக்கு சிறந்த சம்பளம் வழங்குவதோடு, முழு வாக்குரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று அந்தப் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். ஒரு வருடம் கழித்து, அமெரிக்கா இந்த நாளை முதல் தேசிய மகளிர் தினமாக அறிவித்தது. 1911 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி ரஷ்யா மகளிர் தினத்தை கொண்டாடத் தொடங்கியது. 

உலகில் ஆண்களை விட பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பெண்களை கவுரவிக்கும் விதமாக இது உள்ளது. இது தவிர, பெண்களைப் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்துவதற்கும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களை ஊக்குவிக்கவும் சர்வதேச மகளிர் தினம் மிகவும் முக்கியமானது.

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் யோசனை சர்வதேச மாநாட்டின் போது முன்வைக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் யோசனை ஒரு பெண்ணால் வழங்கப்பட்டது. அவள் பெயர் கிளாரா ஜெட்கின். 1910 இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டின் போது கிளாரா சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட பரிந்துரைத்தார், அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இந்த ஆலோசனையை ஆதரித்தனர். சர்வதேச மகளிர் தினம் முதன்முதலில் 1911 இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இந்த நாளைக் கொண்டாடும் போக்கு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடத் தொடங்கியது.

உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாலின சமத்துவத்துடன் இந்த தினத்தின் ஒரு கருப்பொருளை வைத்து அதே கருப்பொருளில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பல சமூக அமைப்புகள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மக்கள் நிகழ்ச்சியை ரசிக்கின்றனர். 1909 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பங்களிப்புஅளிக்கப்படுகிறது. அவர்களின் மரியாதையை வெளிப்படுத்த அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்