Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்  அறிவித்த  ஸ்டூவர்ட் பிராட்

30 ஆடி 2023 ஞாயிறு 08:08 | பார்வைகள் : 1921


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 389 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதன்மூலம் 377 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜானி பேர்ஸ்டோவ் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்தார்.

மூத்த வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக தகவல் வெளியானதை அவர் அதிரடியாக மறுத்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பிராட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 602 விக்கெட்டுகள் வீழ்த்திய பிராட், ஒருநாள் போட்டியில் 178 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 65 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

2010ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், ஸ்டூவர்ட் பிராட் 9வது விக்கெட்டில் களமிறங்கி 169 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்