Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளிடம் கத்தாமல் அவர்களை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளிடம் கத்தாமல் அவர்களை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

22 மாசி 2024 வியாழன் 16:09 | பார்வைகள் : 1733


பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கேட்கவில்லை என்றால், உடனே தங்கள் குழந்தைகளை திட்டுகின்றனர் அல்லது கோபமாக கத்துகின்றனர். குழந்தைகள் தவறு செய்யும் போது அவர்களை திட்டினால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் சில பெற்றோர் எல்லாவற்றிற்கும் கத்துகின்றனர். நாம் கத்தினால்தான் கேட்பார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் குழந்தைகளை அப்படிக் கத்துவது அவர்களின் மனதை மிகவும் புண்படுத்தும். குறிப்பாக மற்றவர்கள் முன்னால் கூச்சலிடும்போது குழந்தைகள் அதிகமாக  பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் மீது கோபத்தில் கத்தினாலும், சிறிது நேரம் கழித்து ஏன் அப்படி கத்தினோம் என்று பல பெற்றோர்களும் வருந்துகின்றனர். ஆனால் குழந்தைகளிடம் கத்தாமல் அவர்களிடம் நிலைமையை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்..

முதலில் உங்கள் குழந்தைகள் சொல்வதை காதுகொடுத்து கேளுங்கள். உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று முன்கூட்டியே கூச்சலிடாமல் நடந்ததைப் பற்றி அவர்களிடம் பொறுமையாக பேசுங்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தயங்காமல் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை நன்றாகக் கேட்டு அதற்கான அறிவுரைகளை பொறுமையாக எடுத்து சொல்ல வேண்டும். எனவே குழந்தைகளும் நீங்கள் சொல்வதை செய்ய வேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள்.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். பிள்ளைகள் தங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் பெற்றோர்கள் விரக்தியடைகின்றனர். அந்த விரக்தியால் குழந்தைகளை கத்துகின்றனர். ஆனால் அது தவறு.. எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருக்காது இல்லை. எனவே.. அவர்களின் திறமையின் மீது நியாயமான எதிர்பார்ப்புகளை மட்டுமே ஏற்படுத்த வேண்டும். எனவே நீங்கள் அவர்களைக் கத்தவும், அவர்களை காயப்படுத்தவும் தேவையில்லை.

பெரும்பாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நடத்தைக்கான அடிப்படை உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்வினையாற்றுகிறார்கள்.  குழந்தையின் நடத்தை மற்றும் அதன் பின்னால் உள்ள உணர்ச்சிகளை வேறுபடுத்துவது முக்கியம். எதிர்மறையான நடத்தையில் மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்கள் குழந்தையின் செயல்களுக்கான மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிக்கவும். அவர்கள் மனச்சோர்வு அல்லது கவலையுடன் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். மேலும் விழிப்புணர்வோடு அடிப்படை உணர்ச்சிகளைக் கையாள்வதன் மூலம், உங்கள் குழந்தை அவர்களின் உணர்வுகளையும் நடத்தைகளையும் மிகவும் திறம்பட கட்டுப்படுத்த உதவலாம்.

உங்கள் பிள்ளையின் நடத்தையை கண்டிப்பாக நல்லது அல்லது கெட்டது என வகைப்படுத்துவதற்குப் பதிலாக, மிகவும் நுணுக்கமான அணுகுமுறையை எடுக்க முயற்சிக்கவும்.அவர்களின் எல்லா செயல்களுக்கும் கத்தாமல், சிறிது நேரம் அமைதியாக இருங்கள். பின்னர் அவர்களிடம்  நிதானமாகப் பேசுங்கள். குழந்தைகள் கெட்டவர்கள் என்ற எண்ணத்தை நாம் ஏற்படுத்தக்கூடாது. மேலும் நீ மோசமான குழந்தை என்று முத்திரை குத்துவதை தவிர்த்து பிரச்சனையை அவர்களுக்கு புரியும் வகையில் விளக்க முயற்சி செய்ய வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்