Paristamil Navigation Paristamil advert login

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கனமழை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

சீன தலைநகர் பெய்ஜிங்கில்  கனமழை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

3 ஆவணி 2023 வியாழன் 05:47 | பார்வைகள் : 2592


சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் 27 பேர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

பெய்ஜிங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 744.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்