Paristamil Navigation Paristamil advert login

மீள்வாசிப்பு செய்யுங்கள்

மீள்வாசிப்பு செய்யுங்கள்

5 மார்கழி 2023 செவ்வாய் 07:19 | பார்வைகள் : 1216


மௌனங்களின் நிழல்களிலே
கசிந்துருகும் ஓர் பிம்பம்
நேற்றைய நாட்களின்
தேடல்களில் ஒளிந்து கொண்டிருக்கும்

பக்கங்களை புரட்டுவதைப் போல்
வருடங்களை நகர்த்திச் சென்று
அறிந்தவர்களை ஆராய்ந்திட
புன்னகையும் ஓர் சிறு துளி கண்ணீரும்
உளவாடி கொண்டிருக்கும்


கோர்வையாய் இல்லாமல்
காலக்கோட்டில் சிதிலடமைந்து
காட்சிகள் யாவும் தன்னை
வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும்

நிலை நின்று ஓர் நிமிடம்
நிசப்தத்தில் விழி வைத்தால்
செவி கேட்கும் சப்தத்தில்
நிறைந்திருக்கும் வார்த்தைகளின்
அர்த்தங்கள் புலப்படும்

இறந்தவர்களின் கையெழுத்தை
வாசித்ததுண்டா ?

மீள்வாசிப்பு செய்யுங்கள்…

வர்த்தக‌ விளம்பரங்கள்