இறந்த பின்னர் நமது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு ஏற்படும் நிலை என்ன?
7 கார்த்திகை 2016 திங்கள் 14:23 | பார்வைகள் : 12690
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் ஆதிக்கம் இன்று உலகம் முழுதும் பரவி கிடக்கிறது.
இதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதன் பயன்படுத்துகிறார்கள் பின்னர் அந்த கணக்கு என்ன ஆகிறது?
நமது உறவினர்களோ, நெருங்கிய நண்பர்களோ உபயோகப்படுத்திய சமூகவலைதள கணக்குகளை அவர்கள் காலத்திற்கு பின்னர் உபயோகப்படுத்த கூட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பேஸ்புக்
நமக்கு தெரிந்த காலமான உறவினரின் பேஸ்புக் பக்கத்தை நாம் பராமரிக்க முதலில் அந்த பக்கத்தை இறந்தவரின் நினைவு சின்னம் பக்கமாக மாற்ற வேண்டும். அதே போல இறந்தவரின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமான ஒன்றாகும்.
டுவிட்டர்
டுவிட்டரை பொருத்த வரையில் இறந்தவரின் கணக்கை பின்னர் வேறு யாரும் தொடர முடியாது.
நாம் இறந்தவருக்கு எவ்வளவு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் இதே நிலைமை தான். அந்த கணக்கை வேண்டுமானால் இறப்பு சான்றிதழ் கொடுத்து நிரந்தரமாக மூடலாம்.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் அலுவுலகத்துக்கு இ-மெயிலை இறந்தவரின் இறப்பு சான்றிதழுடன் இணைத்து அனுப்பினால் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கானது நிரந்தரமாக மூடப்படும்.
யாஹூ
இதுவும் இன்ஸ்டாகிராம் போல தான் இறந்தவரின் இறப்பு சான்றிதழை இ-மெயில் அல்லது பேக்ஸ் மூலம் அனுப்பினால் கணக்கு மூடப்படும்.
பின் இண்ட்ரஸ்ட்
பின் இண்ட்ரஸ்ட்டில் கணக்கை மூட சில தகவல்களை கொடுத்தால் போதுமானது. இதில் கணக்கு வைத்திருப்பவரின் கணக்கு வேறு யாருக்கு தரப்பட மாட்டாது.
கூகுள் மற்றும் ஜிமெயில்
இறந்தவரின் கூகுள் மற்றும் ஜிமெயில் கணக்குகள் அவரின் நெருங்கிய உறவினருக்கு கிடைக்க சிறிய வாய்ப்புகள் உள்ளது, ஆனால் இதை உறுதியாக கூற முடியாது.
இறந்தவரின் இறப்பு சான்றிதழை பேக்ஸ் அல்லது இமெயில் மூலம் அனுப்ப வேண்டும். அந்த கணக்கை அடுத்தவர்களுக்கு தரலாமா என நிறுவனமே முடிவு செய்யும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan