டுவிட்டரில் அறிமுகமாகும் புதிய வசதிகள்!

9 மாசி 2017 வியாழன் 13:57 | பார்வைகள் : 11319
உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் இணையதளம் தற்போது அதற்கான பாதுகாப்பு வசதிகளை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக பல நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் சேர்ந்தே நமக்கு நடைபெறுகிறது.
எனவே அந்த வகையில் டுவிட்டர் நிறம், தேசியம், மொழி, இனம், அரசியல் இது போன்ற தொடர்பான கருத்துக்கள் மூலம் பிறரை விமர்சித்து சர்ச்சையை எழுப்பிய 360,000 பேர்களின் டுவிட்டர் கணக்குகளை தனது வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
மேலும் இது போன்ற சர்ச்சைகள் தொடராமல் இருப்பதற்கு, Safe Search, தொடர்பில்லாத கணக்குகளின் ட்விட்டுகளை பிறருக்கு காட்டாத வகையிலும், பிற கணக்குகளை முடக்கக்கூடிய வகையிலும், Mute செய்யக் கூடிய வகையிலும் சில புதிய அம்சங்களை டுவிட்டர் அறிமுகப்படுத்தி உள்ளது.