Paristamil Navigation Paristamil advert login

குறுகிய செய்தி

குறுகிய செய்தி

12 கார்த்திகை 2012 திங்கள் 07:14 | பார்வைகள் : 14729


கணவன் தனது மனைவிக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினான்.. டார்லிங், இன்று இரவு நான் லேட்டாக வருவேன். அதற்குள் எனது அழுக்குத் துணிகளை துவைத்து விடு. எனக்குப் பிடிச்சதை சமைத்து வை...

மனைவியிடமிருந்து பதில் மெசேஜ் வரவில்லை.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு மெசேஜ் அனுப்பினான் கணவன்.. டார்லிங் மறந்துட்டேன். எனக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளது. உனக்குப் புதுக் கார் வாங்கித் தருகிறேன்...

இப்போது மனைவியிடமிருந்து உடனே பதில் வந்தது.. ஓமைகாட், அப்படியா டியர், உண்மையாகவா...

கணவன் இப்போது ரிப்ளை கொடுத்தான்... அதெல்லாம் இல்லை. முதல் மெசேஜில் நான் சொன்னதை நீ செய்யனும்ல, அதான் 2வது மெசேஜ் அப்படி தட்டி விட்டேன்...

வர்த்தக‌ விளம்பரங்கள்