தையிட்டி போராட்டம் - இது நில அபகரிப்பைத் தடுப்பதற்கானதே தவிர, மதத்திற்கு எதிரானது அல்ல
31 மார்கழி 2025 புதன் 09:04 | பார்வைகள் : 169
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கடுமானத்தை மக்கள் ஒரு போதும் வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பவில்லை சட்டத்துக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடத்தை உரியவர்கள் அகற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எம்மைப் பொறுத்தவரையில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸவிகாரை விகாரையல்ல தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் அடாத்தாக கட்டப்பட்ட சட்ட விரோத கட்டிடம் .
இதற்கு எதிராக இரண்டு வருடங்கள் கடந்தும் ஜனநாயக நீதியாக மக்கள்
போராட்டங்களை மேற்கொண்டு வர நிலையில் அதனை மக்கள் அடாத்தாக அகற்ற வேண்டும் என கருதியது இல்லை.
இலங்கை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடங்களை எவ்வாறு அகற்றுகிறீர்களோ அவ்வாறே இந்த சட்ட விரோத திஸ்ஸ விகாரை கட்டிடத்தையும் அகற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
வலி வடக்கில் #இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில் இந்த சட்ட விரோத விகாரக் கட்டிடம் அமைந்துள்ள பகுதிகளை சூழ்ந்து தமிழ் மக்களின் பாரம்பரியமாக காணப்பட்ட நான்கு #கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஒரு இந்து ஆலயமும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
அதில் 2013 ஆம் ஆண்டு மயிலிட்டி பிள்ளையார் ஆலயம் உயர் பாதுகாப்பு நிலையத்தில் இருந்த போது உரிய அனுமதிகளை பெற்று பாதுகாப்பு தரப்பினர் அப்பகுதி மக்களை ஒரு நாள் வழிபட அனுமதித்தார்கள்.அங்கு வழிபாட்டை நடத்தியவர்கள் தாங்கள் சென்றபோது ஆலயம் முழுமையாக இருந்ததாகவும் தாங்கள் வழிபாடுகளை மேற்கொண்டோம் என தெரிவித்த நிலையில் தற்போது குறித்த ஆலயம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளது .
சட்டரீதியாக மக்கள் வழிபட்ட ஆலயங்களை அழிக்க முடியுமென்றால் சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டடத்தை அகற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது.
நாங்கள் மதங்களை மதிக்கிறோம் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல விடுதலைப் புலிகள் கூட தமது கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோது நயினாதீவு விகாரை மற்றும் யாழ் நாக விகாரைகளை அகற்ற நினைக்கவில்லை பாதுகாத்தார்கள்.
இன்று #யாழ்ப்பாணத்தில் விகாராதிபதிகள் என்ன கூறுகிறார்கள் அண்மையில் #நயினாதீவு நாக விகாராதிபதி கூறினார் தையிட்டியில் புத்தபெருமான் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து விகாரை கட்ட யாருக்கும் கூறவில்லை.
தையிட்டி திஸ் விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்க வேண்டும் என கூறுகிறார்.
அதேபோல் யாழ்ப்பாணம் நாக விகாரதிபதி தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணிகளை அந்த மக்களுக்கே மீணடும் வழங்க வேண்டும் எனக் கூறுகிறார்.
இதிலிருந்து என்ன வழங்குகிறது குறித்த விகாரை சட்டவிரோதமாக அடாத்தாக காணப்படுகின்றமை தெளிவாக பௌத்த துறவிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் பௌத்த மதத்தை இழிவு படுத்தவில்லை யாழிலிருந்து பௌத்த மதத்தை அகற்ற வேண்டுமென கூறவில்லை சட்ட நீதியாக எமது மக்களின் காணி உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றுமாறு கோருகிறோம்.
ஆகவே தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டிடத்தை அகற்றுவதற்காக போராடும் நாங்கள் இனவாதிகளோ மதவாதிகளோ கிடையாது தமிழ் இனத்தின் இருப்புக்காகவும் இன விடுதலைக்காகவும் போராடுபவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan