மெட்ரோ 3 இல் சுத்தியலால் தாக்குதல்: இரண்டு பேர் காயம்!!
30 மார்கழி 2025 செவ்வாய் 13:37 | பார்வைகள் : 807
பரிஸின் மெட்ரோ 3-இல் உள்ள டெம்பிள் (Temple) நிலையத்தில், திங்கள்கிழமை மதியம் 26 வயதுடைய ஒருவர் சுத்தியலின் தலையுடன் இரண்டு பயணிகளை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் ஒரு பயணியிடமிருந்து திருட முயன்று, அவர் மறுத்ததால் முகத்தில் தாக்கியுள்ளார். அந்த நபருக்கு கண் புருவ பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதுடன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 8 நாட்கள் வேலை செய்ய இயலாத நிலை (ITT) வழங்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையை RATP கடுமையாக கண்டித்து, பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் வந்தபோது, சந்தேக நபர் கடும் மதுபோதையில் இருந்ததாகவும், முன்பே பல வன்முறை வழக்குகளில் ஈடுபட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் 17 வயது சிறுவனையும் அதே ஆயுதத்தால் தாக்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டு, பிராந்திய போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு (SRT)க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan