Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்கள் கைது

26 மார்கழி 2025 வெள்ளி 10:47 | பார்வைகள் : 278


கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (26) அதிகாலை கைது செய்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 8.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாட்டிற்குள் கடத்த முயன்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் உள்ள வருகை முனையத்தின் "கிரீன் சேனல்" பகுதியில் இவர்கள் கைது செய்யபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பைச் சேர்ந்த 58 வயது வர்த்தகர் ஒருவரும், பண்டாரவளையைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பெண் வர்த்தகர்களும் அடங்குகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்