Paristamil Navigation Paristamil advert login

எம்பாப்பே–PSG வழக்கு: 61 மில்லியன் யூரோக்கள் செலுத்த PSGக்கு நீதிமன்ற உத்தரவு!!

எம்பாப்பே–PSG வழக்கு: 61 மில்லியன் யூரோக்கள் செலுத்த PSGக்கு நீதிமன்ற உத்தரவு!!

16 மார்கழி 2025 செவ்வாய் 16:11 | பார்வைகள் : 624


கிலியான் எம்பாப்பே–PSG இடையிலான சட்ட மோதலில், பரிஸ் தொழிலாளர் நீதிமன்றம் PSG, எம்பாப்பேக்கு 61 மில்லியன் யூரோக்கள் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தொகை, 2024 ஆம் ஆண்டு அவரது ஒப்பந்தம் முடிவடைந்தபோது செலுத்தப்படாத சம்பளங்கள், போனஸ்கள் மற்றும் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளுக்காக வழங்கப்பட்டது. PSG இந்த தீர்ப்பை நிறைவேற்றுவதாக தெரிவித்தாலும், மேல்முறையீடு செய்யும் உரிமையை வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. உடனடி அமுலாக்க உத்தரவு இருப்பதால், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் கிளப் உள்ளது.

எம்பாப்பே தரப்பு இந்த தீர்ப்பை ஒரு முக்கியமான வெற்றியாகக் கருதுகிறது; தொழில்முறை கால்பந்திலும் தொழிலாளர் சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எம்பாப்பே மொத்தமாக 263 மில்லியன் யூரோக்கள் கோரியிருந்தாலும், அந்த கூடுதல் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், 440 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு கோரி PSG செய்த எதிர்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்