Paristamil Navigation Paristamil advert login

ரோமன்-சூர்-இசேர் தாக்குதல்- பயங்கரவாதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

ரோமன்-சூர்-இசேர் தாக்குதல்- பயங்கரவாதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

8 கார்த்திகை 2025 சனி 13:03 | பார்வைகள் : 2423


2020-ல்  Romans-sur-Isère (Drôme) இல் கத்தித் தாக்குதல் நடத்திய சூடானிய பயங்கரவாதி அப்துல்லா ஒஸ்மான் அகமெத் (Abdallah Osman Ahmed) இற்கு நவம்பர் 7 அன்று 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

1280.jpg
 

30 ஆண்டுகள் சிறைத் தண்டனை (எக்காரணம் கொண்டும் 20 ஆண்டுகள் முன்னர் விடுதலை இல்லை)

ஏப்ரல் 4, 2020 அன்று நடந்த இந்தப் பயங்கரவாதி நடாத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட ஐந்து பேர் காயம் படுகாயமடைந்தனர். 35,000 மக்கள் தொகை கொண்ட ரோமன்-சூர்-இசேரில் கத்தியால் தாக்குதல் நடாத்ப்பட்டது. இது கோவிட் தடை காலத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலாகும்.

பாரிஸ் நீதிமன்றத்தில் இரண்டு வார விசாரணை நடாத்ப்பட்டது.

நீதித்துறை நடவடிக்கைகள்:

சிறப்பு அமைப்பு கொண்ட நீதிமன்றம் (ஜூரிகள் இல்லாமல்) அமைக்கப்பட்டது.
தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் தொடரப்பட்டன.

ஆயுள் தண்டனை குறைக்கப்பபட்டு 30 ஆண்டுகளாக தண்டணை வழங்கப்பட்டது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்