Paristamil Navigation Paristamil advert login

சற்றுமுன் அர்ச்சுனா எம்.பி கோட்டை பொலிஸாரால் கைது

சற்றுமுன் அர்ச்சுனா எம்.பி கோட்டை பொலிஸாரால் கைது

29 புரட்டாசி 2025 திங்கள் 10:15 | பார்வைகள் : 177


யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்திற்கு இடையே அங்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர், பின்னர் கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரை திட்டியிருந்தார்.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்