உலகக்கிண்ணத்தில் கைகுலுக்க மறுத்த இந்தியா, பாகிஸ்தான் மகளிர் கேப்டன்கள்
5 ஐப்பசி 2025 ஞாயிறு 14:37 | பார்வைகள் : 1967
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா, பாகிஸ்தான் அணித்தலைவர்கள் கைகுலுக்க மறுத்தனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டி கொழும்பில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் பாத்திமா சனா பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அதன் பின்னர் இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுரும், பாத்திமா சனாவும் கைகுலுக்க மறுத்தனர்.
இந்திய ஆடவர் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்ததைத் தொடர்ந்து இது வந்துள்ளது. ஆடவர் அணி ஏற்கனவே இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் ஐசிசி வகுத்துள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண வழிகாட்டுதல்கள், வீராங்கனைகளுக்கு இடையே கைகுலுக்கலை கட்டாயமாக்கவில்லை.
மேலும், அவர்களின் நடத்தை விளையாட்டின் உணர்வை நிலைநிறுத்தவில்லை என்றால், அணிகள் அல்லது வீராங்கனைகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan