வடமேற்கு நைஜீரியாவில் கொலரா தொற்று ; 08 பேர் உயிரிழப்பு - 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
28 ஆவணி 2025 வியாழன் 19:19 | பார்வைகள் : 2283
வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தின் புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்று நோய் பரவி வருவதால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் நீரினால் பரவும் நோயான கொலரா தொற்றால்அதிகளவானோர் பாதிக்கப்படுகின்றனர்.
ஏனெனில், அங்கு கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற சேரிகளில் சுத்தமான நீர் பற்றாக்குறை பரவலாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
நசராவா-பர்குல்லு, குருசு மற்றும் அடாப்கா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்கள் நிரம்பி வழிகின்றன. ஆரம்ப சுகாதார வசதிகள் இன்மையால் பல நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்மைய மாதங்களில் அதிகரித்து வரும் வன்முறை பயணத்தையும் விவசாயத்தையும் ஆபத்தானதாக மாற்றியுள்ளதால், உள்ளூர்வாசிகள் கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் ஆயுதமேந்திய மனிதர்களின் தாக்குதல்களின் மையமாக ஜம்ஃபாரா உள்ளது. கும்பல்கள் கிராமவாசிகள் மற்றும் பயணிகளை மீட்கும் பணத்திற்காக கடத்தி விவசாய சமூகங்களை மிரட்டி பணம் பறிப்பது வழக்கம்.
மத்திய சட்டமன்ற உறுப்பினரான சுலைமான் அபுபக்கர் குமி,
ஜம்ஃபாரா அரசாங்கம் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து அவசர நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தார். "எந்தவொரு தாமதமும் அதிக உயிர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை யே இழக்க நேரிடும்". எனவே, அவசரகால மீட்புக் குழுக்கள் மற்றும் கொலரா சிகிச்சை மையங்களை அமைக்குமாறு வலியுறுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan