காவல்துறையையும் பூனையையும் தாக்கியவருக்கு €1550 அபராதமும் சிறையும்!!
19 ஆவணி 2025 செவ்வாய் 22:51 | பார்வைகள் : 4277
2025 ஆகஸ்ட் 14 இரவு, Beauvais நகரில், ரிச்சர்ட் எஸ். என்பவர் தனது நண்பர்களால் போதை மயக்கத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, தனது மனைவி தரையில் விழுந்திருப்பதை பார்த்தபின், கோபத்தில் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுக்க முயன்றுள்ளார்.
காவல் துறையினர் வந்ததும், அவர் ஒரு பெண் காவல் துறை அதிகாரியை தள்ளி தாக்கியதோடு, திட்டியும், ஒருவர் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என கத்தியதாகவும் கூறப்படுகிறது.
காவலில் இருந்தபோது, அவர் காவல்நிலைய பூனையான "Police"ஐ வயிற்றில் காலால் பலமாக உதைத்துள்ளார். பூனை பல அடி தூரம் விழுந்து, மறுநாள் தான் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், 40 வயதான ரிச்சர்ட் எஸ்.க்கு 15 மாதங்கள் சிறைதண்டனையும் 1,550 யூரோ அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan