பெண்கள் மீதான தாக்குதலால் Colombes நகரில் பதட்டம்!!!
17 ஆவணி 2025 ஞாயிறு 21:16 | பார்வைகள் : 4134
Colombes நகரில் சனிக்கிழமை இரவு வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த 20 வயதுடைய இரண்டு இளம் பெண்கள் வாடகைக்கு எடுத்த அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று ஆண்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
வடஅந்த ஆண்களில் ஒருவரிடம் கத்தரிக்கோல் இருந்ததாக கூறப்படுகிறது. முகத்தில் காயமடைந்த பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் தப்பி ஓடிய நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஒரு நாள் முன், அதே நகரத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு இளம் பெண் மார்பில் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். சம்பவத்தின் பின்னணியில் பணமளிக்க வேண்டிய தொடர்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான சண்டை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan