இடி மின்னல் மழை - இல்-து-பிரான்ஸ் உட்பட 47 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

13 புரட்டாசி 2025 சனி 13:20 | பார்வைகள் : 295
இடி மின்னல் தாக்குதலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு 47 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் அடங்குகின்றன.
செப்டம்பர் 13, இன்று சனிக்கிழமை நண்பகல் முதல் நள்ளிரவு வரை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் (Météo-France) எச்சரித்துள்ளது. வடமேற்கில் ஆரம்பித்து வடகிழக்கு வரையும், தென் கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ள மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aisne, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Ardennes, Aube, Bouches-du-Rhône, Calvados, Côte-d'Or, Côtes d'Armor, Drôme, Eure, Eure-et-Loir, Finistère, Gard, Ille-et-Vilaine, Loir-et-Cher, Loiret, Lozère, Manche, Marne மற்றும் Haute-Marne மாவட்டங்களுக்கும்,
Mayenne, Meurthe-et-Moselle, Meuse, Morbihan, Moselle, Nord, Oise, Orne, Pas-de-Calais, Pyrénées-Orientales, Haute-Saône, Sarthe, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Somme, Vaucluse, Vosges, Yonne, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-D'Oise மாவட்டங்களுக்கும் “மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை Var மாவட்டத்துக்கு இடி மின்னல் மழையுடன் கூடிய வெள்ள அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு அதற்கு
செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025