Paristamil Navigation Paristamil advert login

யாழில் சகோதரியுடன் வசித்து வந்தவர் சடலமாக மீட்பு

யாழில் சகோதரியுடன் வசித்து வந்தவர் சடலமாக மீட்பு

29 ஆடி 2025 செவ்வாய் 16:01 | பார்வைகள் : 270


யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்த ஒருவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் , மணியம் தோட்டம் , 1ஆம் குறுக்குத் தெருவைச், சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம்  (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் , அவரது 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்