Bobigny விடுமுறை முகாமில் உயிரிழந்த 7 வயது சிறுவன்!!

16 ஆவணி 2025 சனி 16:03 | பார்வைகள் : 1413
பொபினி (Bobigny) நகரம் நடத்திய விடுமுறை முகாமில் கலந்து கொண்ட 7 வயது ஆட்டிசம் கொண்ட சிறுவன், அலியர் (Allier) மாவட்டத்தில் உள்ள செயின்-மெனூக் (Saint-Menoux) குதியில் உள்ள விளையாட்டு பூங்கா ஒன்றில் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15 அன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அந்த இடத்தில் நீச்சல் தடை செய்யப்பட்டிருந்தபோதிலும், சிறுவன் மேற்பார்வை இல்லாமல் தவறி நீர் நிலைக்கு சென்றுள்ளார். மீட்புப் படைகள் உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறுவன் ஒன்றரை மணி நேரத்தில் நீரில் இருந்து மீட்கப்பட்டபோதும், அவரை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை.
இந்தச் சம்பவம் பாபினி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெரும் சோகத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் இரட்டையர் சகோதரரும் முகாமில் கலந்து கொண்டிருந்தார். முகாமில் மொத்தம் 35 குழந்தைகள் கலந்து கொண்டிருந்தனர், மேலும் 8 பேர் கொண்ட மேற்பார்வை குழுவும் இருந்தது.
சம்பவத்துக்குப் பிறகு, வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம், குடும்பத்திற்கு ஆதரவளித்து, மற்ற சிறுவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.