வீடற்ற பெண் மற்றும் குழந்தைகள் மீது இரு ஆண்கள் சிறுநீர் கழித்ததை தொடர்ந்து விசாரணை ஆரம்பம்!!
13 ஆவணி 2025 புதன் 14:45 | பார்வைகள் : 10016
பரிஸ் Hôtel de Ville முன் தூங்கிக்கொண்டிருந்த ஓர் வீடற்ற பெண் மற்றும் அவரது குழந்தைகள் மீது இரு இளைஞர்கள் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக "குழு வன்முறை" எனும் பிரிவில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 10-ம் திகதி இரவு நடந்ததாக, பரிஸ் தடைநீக்கக் கழகம் (parquet) தெரிவித்துள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. Utopia 56 அமைப்பு இந்த செயலை "மிகவும் கடுமையானது" எனக் கண்டித்து, இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது.
மேலும், கடந்த ஆறு நாட்களாக அவசர தங்குமிடம் இல்லாத காரணத்தால் Hôtel de Ville முன் தங்கியிருந்த சுமார் 350 வீடற்ற குடியிருப்பாளர்கள், அதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட, செவ்வாய்க்கிழமை காலை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் கூறிய எண்ணிக்கையின் படி 350 பேர் இருந்ததாகவும், ஆனால் Utopia 56 அமைப்பின் மதிப்பீட்டுப்படி 230 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்




Ajouter
Annuaire
Scan