அது ஒரு சதுரங்க விளையாட்டு: ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய ராணுவத் தலைமை தளபதி திவேதி
10 ஆவணி 2025 ஞாயிறு 12:11 | பார்வைகள் : 2672
ஆப்பரேஷன் சிந்தூரில் நாங்கள் சதுரங்க விளையாட்டு போல சாதுர்யமாக விளையாடினோம் என ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி பேசியதாவது: ஆப்பரேஷன் சிந்தூரில், நாங்கள் சதுரங்கம் விளையாடினோம். எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும், என்ன செய்யப் போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியாது. இது கிரே சோன் (Grey zone) என்று அழைக்கப்படுகிறது. கிரேசோன் என்றால் நாம் வழக்கமான நடவடிக்கைகளுக்கு அல்ல.
நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது. நாங்கள் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். அவர்களும் (எதிரி) சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தார். எங்கோ நாங்கள் அவர்களுக்கு செக்மேட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை செயல்படுத்த பாதுகாப்பு படையினருக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்தது. ஏப்ரல் 22ம்தேதி அன்று பஹல்காமில் நடந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மறுநாளே, 23ம் தேதி, நாங்கள் அனைவரும் அமர்ந்தோம். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 'எல்லாம் போதும் போதும்' என்று கூறியது இதுவே முதல் முறை. சுதந்திரமான முறையில் செயல்பட உத்தரவுகள் வழங்கப்பட்டன. என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.' அந்த வகையான நம்பிக்கை, அரசியல் தெளிவை நாங்கள் முதன்முறையாகக் கண்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan