Paristamil Navigation Paristamil advert login

கானாவில் ஹெலிகாப்டர் விபத்து - 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி!

கானாவில் ஹெலிகாப்டர் விபத்து - 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி!

7 ஆவணி 2025 வியாழன் 09:38 | பார்வைகள் : 3276


ஆப்பிரிக்க நாடான கானாவில் 6ஆம் திகதி புதன்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.

 

இறந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முஹம்மது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

நாட்டில் சட்டவிரோத சுரங்கத் தொழிலை ஒடுக்குவதற்காக ஒபுவாசி நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது குறித்த விபத்து நிகழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுக்கின்றது.