Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வு

ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வு

5 ஆவணி 2025 செவ்வாய் 08:54 | பார்வைகள் : 6767


ரஷ்யாவின், கம்சட்கா பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த நில அதிர்வினால் ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

அத்துடன், ஆழிப்பேரலை அறிவிப்பு குறித்த விவரங்களும் வெளியாகவில்லை எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது.

தொடரும் இந்த சக்தி வாய்ந்த நில அதிர்வுகளின் எதிரொலியாக, ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.