Paristamil Navigation Paristamil advert login

கோடைகாலத்தில் - நீரில் மூழ்கி 193 பலி!

கோடைகாலத்தில் - நீரில் மூழ்கி 193 பலி!

1 ஆவணி 2025 வெள்ளி 13:02 | பார்வைகள் : 518


சென்ற வருடத்தின் கோடைகாலத்தோடு ஒப்பிடுகையில், இவ்வருட கோடைகாலத்தில் ‘அதிகமானோர்’  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 

ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 23 ஆம் திகதி வரையான நாட்களில் 702 ‘நீரில் மூழ்கிய’ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 193 பேர் பலியாகியுள்ளனர். 2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 45% சதவீதத்தால் அதிகமாகும். சென்றவருடத்தின் இதே காலப்பகுதியில் 130 பேர் உயிரிழந்திருந்தனர்.

இவ்வருடத்தில் உயிரிழந்தவர்களில் 27 பேர் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, இவ்வருட கோடைகாலம் நிறைவடைவதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்