ட்விட்டர் கொலைகாரனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி ஜப்பான்
27 ஆனி 2025 வெள்ளி 18:15 | பார்வைகள் : 5819
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் முதல் முறையாக மரண தண்டனை பயன்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு ஒன்பது பேரைக் கொன்ற ஒருவருக்கு ஜப்பான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
ஜப்பானின் டோக்கியோவிற்கு அருகிலுள்ள ஜமா நகரில் அமைந்துள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் 2017 ஆம் ஆண்டு எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் கழுத்தை நெரித்தும், உடல் உறுப்புகளை துண்டித்தும் படுகொலை செய்ததற்காக தகாஹிரோ ஷிரைஷி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சமூக ஊடக தளம் வழியாக பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டதால் அவர் ட்விட்டர் கொலையாளி என்று அழைக்கப்பட்டார்.
சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்திய குற்றவாளியின் மிகவும் சுயநல நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, கவனமாக ஆராய்ந்த பிறகு இந்த முடிவை எடுத்ததாக நீதித்துறை அமைச்சர் கெய்சுகே சுசுகி விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு டோக்கியோவின் ஷாப்பிங் மாவட்டமான அகிஹபராவில் கத்தியால் தாக்குதல் நடத்திய ஒருவருக்கு ஜூலை 2022 ல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ட்விட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அரசாங்கம் பதவியேற்ற பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை.
மேலும், கடந்த ஆண்டு செப்டம்பரில், ஜப்பானிய நீதிமன்றம், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட குற்றங்களுக்காக தவறான தண்டனை அனுபவித்து வந்த, உலகின் மிக நீண்ட காலம் மரண தண்டனையில் கழித்த இவாவோ ஹகமடாவை விடுவித்தது.
ஜப்பானில் பொதுவாக மரண தண்டனை தூக்கிலிடப்படுவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது, மேலும் அது நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே கைதிகளுக்கு அவர்களின் மரணதண்டனை குறித்து அறிவிக்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan