ஜனாதிபதி மக்ரோன் தம்பதியினரின் - தென் கிழக்கு ஆசியாவுக்கான ஆறுநாட்கள் சுற்றுப்பயணம்... !

26 வைகாசி 2025 திங்கள் 09:00 | பார்வைகள் : 931
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் ஆறுநாட்கள் சுற்றுப்பயணமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் வியட்நாமைச் சென்றடைந்துள்ளனர். பிரான்சை அமெரிக்காவுக்கும்- சீனாவுக்கும் நம்பகமான மாற்று பங்காளியாக முன்னிறுத்தி, தொழிற்துறைகளை விஸ்தரிக்கவும், முதலீடுகளை பெற்றுக்கொள்ளவும் இந்த பயணம் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
வியட்நாம் தலைநகர் Hanoi iல் வைத்து அந்நாட்டு ஜனாதிபதியை இன்று திங்கட்கிழமை சந்திக்கின்ற்னர்.
அத்தோடு அவர்கள் இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் என அடுத்து வரும் ஆறுநாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.